வெள்ளி, 24 டிசம்பர், 2010

குருவி - தி கில்லி

குருவி - இந்த நாட்டுல தட்டு தடுமாறி திசைமாறி கெட்டுபோன கெட்டிகார பசங்கள்ள இவனும் ஒருத்தன். ஷார்ட்டா சொல்லனும்னா இவன் ஒரு மொள்ளமாரி . மீடியம் - ஆ சொல்லனும்னா எக்ஸ்-ரூம்மேட்.

முதல் சந்திப்பில் போதே மூக்கின் மேலே விரல் வெக்கிற மாதிரி கேள்வி கேட்பான்.என்கிட்டயும் அப்படி தான் கேட்டான்.

"பாத்ரூம் எங்க இருக்கு ?" - அப்படின்றது தான் என்ன பாத்து கேட்ட கேள்வி.

படிக்கிற பசங்களுக்கு இருக்கிற முக லட்சணம் எல்லாம் அமைய பெற்ற இவன் படிப்புல ஒரு பியுஸ் போன குண்டு பல்பு அப்படின்றது எனக்கு அப்போ தெரியாது.காலேஜ் டைம்ல முதல் முறையாக ரூம் ஷேர் பண்ணிட்டு இருந்த டைம் அது.


"Toiletla பேப்பர் இருக்கா?" - என்று கேட்டவனுக்கு படிக்கதான் கேக்கறான்னு நினைச்சி நான் குடுத்தது தினத்தந்தி பேப்பர்.

"இது இல்ல" - என்று மறுத்த அவனுக்கு பல்பு வாங்குவது கூட தெரியாமல் மறுபடி நான் ஹிந்து பேப்பர் நீட்ட நக்கலாய் சிரித்தான்.அதற்க்கான காரணம் எனக்கு புரிய ரொம்ப நாள் ஆச்சி.

சரி பைய செம பிஸ்து போல அப்படின்னு நினைக்கிற வகையில் அவனோட நடவடிக்கைகள் இருந்தது. ஆனா அதெல்லாம் வெத்து சீன் அப்படின்றது தினத்தந்தி பேப்பர்ல சினிமா,ஸ்போர்ட்ஸ் பகுதி மட்டும் படிச்சிட்டு தூக்கி போடும் போதே புரிஞ்சது.

ரெண்டு பேரும் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் ஒரே பேட்ச் அப்படின்றதால அறிமுகத்துக்கும்,பழகுவதிலும் பெருசா ஒன்னும் சிரமம் ஏற்படல.

பஸ்ட் டே கான்டீன்லதான் சாப்ட போனோம். லஞ்ச் நான் சாப்ட ஆரமிக்க அவன் எதோ தேட ஆரமிச்சான்.

"என்ன தேடற?"

"இல்ல கைல சாப்ட நான் ரொம்ப டைம் எடுத்துப்பேன்.ஒரு நிமிஷம் வந்துடறேன்"

நேரா கவுன்ட்டர் போனவன்,

"ஹலோ,fork இருக்கா?"

"இல்லைங்க,இங்க போர்க் எல்லாம் போடறது இல்ல.நான்வெஜ் - ல ஒன்லி சிக்கன் அப்புறம் பிஷ் மட்டும் தான்" - என்று பல்பு குடுத்து அனுப்பினார்.இதெல்லாம் வெறும் சாம்பிள் தான்.

ஒரு வழியா சாப்டு முடிச்சிட்டு மதியம் கம்ப்யூட்டர் லேப்க்கு போய் சேர்ந்தோம்.ஆர்டர் படி சீட் பண்ணதால நான் ஒரு இடத்திலும் குருவி வேற ஒரு இடத்திலும் இருந்தோம்.முதல் நாள் அப்படின்றதால லேப் அட்டெண்டர் தவிர யாரும் இல்ல.எல்லாரயும் போல நானும் solitaire ஓபன் பண்ணி டைம் பாஸ் பண்ண ஆரமிச்சேன்.

கொஞ்ச நேரத்துல வந்தான் குருவி,

"கொஞ்சம் என் ப்ளேஸ்க்கு வா.என் சிஸ்டம் வொர்க் ஆகல"

நம்ம கிட்டயும் ஒருத்தன் டவுட் கேக்கறானே அப்படின்னு ஒரு பூரிப்பு இருந்தாலும் வெளிய காட்டிக்காம போனேன்.

"என்ன பிரச்சனை?"

"சிஸ்டம் ஸ்டார்ட் ஆகவே இல்ல" - என்றான்.

நானும் CPU ஆப் செஞ்சி மறுபடி மறுபடி on பண்ணி பாக்க டிஸ்ப்ளே வரவே இல்ல.ஒரு வேல power இல்லியோ இவன் புடிங்கி விட்டு டெஸ்ட் பண்றானோ என்று கீழே குனிந்து பார்க்க என்னை அடிக்காத குறையா குருவி பாத்தான்.

"அதெல்லாம் ஏற்கனவே நான் செக் பண்ணிட்டேன்"

"அப்போ இது ஹார்ட்வேர் பிரச்னை தான்" - என்று எனக்கு தெரிஞ்ச ஒரு டெர்ம் சொல்லி தப்பிக்க நினைச்சேன்.

"இல்ல இது மாதிரி வந்தா இது சாப்ட்வேர் பிரச்னையா தான் இருக்கும்" - என்று கவுன்ட்டர் குடுக்க ஆரம்பித்தான் குருவி.

ஹார்ட்வேர்,சாப்ட்வேர் என்ற பேச்சு லேப் அட்டெண்டர் காதுல விழ நேரா அங்க வந்து சேர்ந்தார்.

"வாட் இஸ் தி ப்ராப்லம்?"

நான் பிளாஷ்பாக் எபிசொட் ஓடி முடித்தேன்.

"தம்பி இது நீங்க சொல்லற மாதிரி எந்த பிரச்னையும் இல்ல.நீங்க பக்கத்து சிஸ்டம் CPU On பண்ணிட்டு உங்க சிஸ்டம் செக் பண்ணிட்டு இருக்கீங்க.உங்க CPU இந்த பக்கமா இருக்கு."

"ஒ சாரி சார்.நான் லேப்ல நெட்வொர்க் கனெக்ஷன் இருக்குன்னு நெனச்சேன்" - குருவி சொன்னதை கேட்டு மயங்கி விழுந்தார் அட்டெண்டர்.

4 கருத்துகள்:

  1. :)
    யாரு அந்த குருவி??
    இந்த கதை எல்லாம் நான் ஏற்கனவே கேட்டிருக்கேன்..

    பதிலளிநீக்கு
  2. நன்றி பாலா,வினோத் அண்ட் வெங்கட்.
    @ வினோத் : சும்மா டைம் பாஸ் தான்
    @ வெங்கட் : ஒரு வேல நீயும் இத பண்ணி இருக்கியோ

    பதிலளிநீக்கு