செவ்வாய், 30 நவம்பர், 2010

டேட்டிங்

"அட ச்சே.இந்த ஏரியால எருமைங்க தொந்தரவு ஜாஸ்தி ஆயிடிச்சி.காலில எப்புடி கத்துதுங்க" - கண் முழிக்க முடியாம எந்திரிச்சி பாத்தான் சிவா.

டிவி-ல காதலின் தீபம் பாட்டு ஓடின்னு இருக்க அதுக்கு லிப் மூமென்ட் குடுத்து உருகி பாடினு இருந்தான் மருது .அதுக்கு பக்கத்துல சந்துரு காதை மூடிட்டு தூங்க ட்ரை பண்ணிட்டு இருந்தான்.


"அதான் நீ பாடறியே - இது என்னத்துக்கு ??" - ரிமோட் எடுத்து ஆப் பண்ணான் சிவா.

"அட ச்சீ ரிமோட் குடு "

"நீதான் உன் ஹரிஹரன் வாய்ஸ் ஓபன் பண்ணியா.நான் கூட நம்ம ஏரியா எருமை எல்லாத்தையும் தப்பா பேசிட்டேன்."

"விடு மச்சி.காலில எந்திரிச்ச உடனே போய் அதுங்க கிட்ட சாரி கேட்டுடலாம்" - தூக்கத்தில் உளறினான் சந்துரு.

வாட்ச் எடுத்து சிவா டைம் பாக்க மணி காலைல 6.

"என்னடா ஆச்சி உனக்கு.எப்புமே அலாரம் அடிச்சா கூட ஆப் பண்றதுக்கு 6 மணி நீ எந்தரிசிதது இல்லியே.அதுவும் இன்னைக்கி சண்டே." - சிவா .

"ஒன்னும் இல்ல மச்சி.நீ தூங்கு"


"கொஞ்ச நாள் உன் activities சரி இல்லையே.வழக்கத்துக்கு மாதிரி இல்லாம இன்னைக்கி உன் மொகத்துல சந்தோஷ ரேகை அதிகமா தெரியுதே.என்னடா மேட்டர் ?"

"லைட் போடாம பாத்தா அவன் அப்படி கொடூரமா தாண்டா தெரிவான்" - இன்னமும் தூக்கத்தில் பேசிட்டு இருந்தான் சந்துரு.

"லவ் மூட் ஸ்டார்ட் ஆனா எல்லாம் அப்படி தான் "


இவ்ளோ நேரம் தூங்கிட்டு இருந்த சந்துரு இந்த பதிலை கேட்டஉடனே விழுந்தடிச்சி எந்திரிச்சான்.

"என்ன சொல்ற மச்சி ?? லவ் மூடா ?? "


"ஆமா"

" என்னடா சொல்லற." அதிர்ச்சியுடன் "யாரு அந்த பொண்ணு ?" - சிவா

"என்னோட காலேஜ் மேட் மச்சி.கொஞ்ச நாள் முன்னாடி திரும்ப மீட் பண்ணேன் .ரெண்டு பேரும் கொஞ்ச நாலா பேசிட்டு இருக்கோம்.இன்னைக்கி 5 மணிக்கி தனியா மீட் பண்ணலாம்னு பிளான். "


"அட பாவி.சொல்லவே இல்ல.அப்போ டேட்டிங்?"

" எஸ். பாரிஸ்டா மீட் பண்ணலாம்னு பிளான்."

"டேய் நெசமாத்தான் சொல்லறியா? இல்ல நைட் ஏதாவது கனவு கண்டியா?"

தனக்கு வந்த எஸ்.எம்.எஸ் எடுத்து காமிச்சான் மருது.ரெண்டு பேருக்கும் உள்ளுக்குள்ள புகைய ஆரமிச்சது.,இருந்தாலும்

"மச்சி எங்கள்க்கும் இன்ட்ரோ குடுடா"

"பாக்கலாம்.ட்ரை பண்ணறேன் "

இதுக்கு மேல கேட்டு அவமான பட வேணாம்னு ரெண்டு பேரும் அமைதி ஆனாங்க.

மணி 4 ஆக,மருது ரெடி ஆயிட்டு கெளம்ப இருந்தான் .

"மச்சி இருடா நாங்களும் வரோம்.அப்படியே நாயர் கடைல காபி அடிச்சிட்டு போலாம்" - சந்துரு ரெடி ஆனான் .

"உஷ் நான் basically பசங்களோட எல்லாம் காபி சாப்டறது இல்ல.இருந்தாலும் நீ ஆசபட்டுட்ட சரி வா போலாம்" .

"நாராயணா இந்த கொசு தொந்தரவு தாங்க முடில.மருந்து அடிச்சி மொதல்ல கொல்லனும். " இப்படி ஒரு வழியா காபி முடிஞ்சி மருது டேட்டிங்க்கு கெளம்பிட்டான்.

மருது திரும்ப வரும்பொழுது மணி 8.

"அப்புறம் மச்சி.இன்னைக்கி பார்ட்டி தான்.எல்லாரும் மருது பேர்ல மொய் எழுதிடலாம்." - சிவா.

சலிப்புடன் சிவா பக்கத்துல போன மருது "ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு பீலிங் மச்சி.இதுக்கான அர்த்தம் இன்னைக்கி தான் எனக்கு முழுசா புரிஞ்சது".

"சரி சரி.பேச்சை குற.கதைய சொல்லு"

"நான் கரெக்டா 5 மணிக்கி எல்லாம் போய் ஒரு கார்னர் டேபிள் புடிச்சி அவளுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன்"

"கடைசி வரைக்கும் அவ வரவே இல்லையா?" - ஆர்வத்துடன் கேட்டான் சந்துரு.

"நீ நெனைக்கிற மாதிரி எல்லாம் இல்ல .அவ 5:30 பக்கமா அங்க வந்தா.வந்த உடனே "சாரி அயம் லேட்" அப்படின்னு சொன்னா

"இட்ஸ் ஓகே.டேக் யுவர் சீட்" - இது நானு.

"தேங்க்ஸ்.ஹவ் யு டூஇங்?"

"ஓக்ஸ்.யு ஆர் லுகிங் ப்ரெட்டி டுடே" - அப்படின்னு பிட்ட போட்டேன்.

சந்துரு செம காண்டு ஆயிட்டான் - "டேய் நம்ம ஹாரி பாட்டர் படமே அரிசிவமூர்த்தி - தமிழில் அப்படின்னு டப் பண்ணி பாக்கற ஆளுங்க.டப் பண்ணி சொல்லுடா ஒன்னும் புரில".

"ப்லொவ் மிஸ் ஆகுதுடா.நீ சொல்லு மச்சி" - சிவா.

"அப்படியே கொஞ்ச நேரம் பேசிட்டு ஆர்டர் பண்ணோம்."

"ஹ்ம்ம்.அப்பறம்?"

"ஒரு முக்கியமான விஷயம்" - அப்படின்னு ஆரமிச்சா . "அதுக்கு தான் இங்க வர சொன்னேன்.தப்பா எடுத்துக்காத .உன்னால கண்டிப்பா இத பண்ண முடியும்." அப்படின்னு சொல்லிட்டு அவ வெச்சிருந்த பாக்ல இருந்து ஒரு பேப்பர் எடுத்தா.

"அட பாவி - லவ் லட்டர்ஆ "

"இல்ல.அங்க தான் விதி பெருசா வேலைய காட்டிச்சி"

"என்ன?"

"அவ ரிலையன்ஸ் லைப் இன்சூரன்ஸ்-ல வேலைல இருக்காலாம்.ஒரு புது பாலிசி இப்போ வந்திருக்குதாம்.அத பத்தி விளக்கம் சொல்ல தான் உன்ன இங்க கூப்டேன் .இந்த வாரதுக்குள்ள கண்டிப்பா ஒருத்தர புடிக்கணும் .நீதான் பாலிசி போட்டு எனக்கு ஹெல்ப் பண்ணனும் அப்படின்னு சொல்லிட்டா.எனக்கு பப்பி சேம் ஆகி போச்சி மச்சி."

இது வரைக்கும் அமைதியா கேட்டுட்டு இருந்த சிவா,சந்துரு இப்போ கால் கொட்டி சிரிக்க ஆரமிச்சிட்டாங்க.

"மச்சி. அவ உன்னைய மளிகை சாமான் வாங்கிட்டு வர சொல்லிருக்கா பா".

புதன், 24 நவம்பர், 2010

கால்பந்து

புட்பால் எது வாலிபால் எது அப்படின்ற குழப்பம் இன்னமும் பல பேர்க்கு இருக்கு என்னையும் சேர்த்து. சின்ன வயசுல பல தடவ வாலிபால் வெச்சி புட்பால் விளையாடி என்னோடு தண்டனை வாங்கின சில பேர்க்கு இது புரியும்.ஒரு வகுப்பில் உள்ள நாற்பது பேரும் ஒரு பந்தை துரத்திட்டு ஓடிட்டு இருப்போம். புட்பால் உதைத்ததை விட நண்பர்களின் காலை உதைச்சது தான் ஜாஸ்தி .

மேலே சொன்ன எல்லா விஷயமும் கோபிக்கு பொருந்தும். கோபி - காலேஜ்ல படிப்பை தவிர எல்லாத்தயும் பாஸ் பண்ணிட்டு இருக்கறவன் டைம் பாஸும் சேர்த்துதான்.லீவ் நாட்களில் தன் நண்பன் முரளி ரூமே கதி என்று கிடப்பான்.அப்படி தான் ஒரு சண்டே முரளி ரூம்க்கு போனான்.

காலிங் பெல் அடிக்க கதவை திறந்தது வாசு.

" மச்சி வாசு டா. என் பிரண்டு நான் சொல்லிருக்கேன் இல்ல." - முரளி அறிமுகம் செய்தான்.

" ஹாய் பாஸ் " - "ஹாய் ".

ஏற்கனவே வாசு பெரிய டூமான்கோலி அப்படின்னு முரளி கோபி கிட்ட சொல்லி வெச்சிருந்தான்.அதனால கொஞ்சம் அடக்கியே வாசித்தான் கோபி.

"இன்னைக்கி என்ன பிளான் மச்சி " - பிட்டை போட்டான் கோபி.

"இன்னைக்கி மேட்ச் இருக்கு மச்சி.வாசு பாக்கணும்னு சொல்லறான் " - முரளி.

"கிரிக்கெட் மேட்ச் எதுவும் இல்லியே இன்னைக்கி" - கோபி

"புட்பால் மேட்ச் பாஸ். வேர்ல்ட் கப் நடந்துட்டு இருக்கே.நீங்க பாக்கறது இல்லியா.இன்னிக்கி இங்கிலாந்த் அண்ட் பிரேசில் மேட்ச். பட்டய கெளப்பும்" - வாசு

ஒரு கணம் ஐயோ புட்பால் என்று விபரீதம் தோன்றி மறைந்தாலும் வெளிய காட்டமா
"ஆமா.நானும் மறந்தே போயிட்டேன்." - என்று பில்ட் அப் கொடுத்தான் கோபி.

"எனக்கு புட்பால் மேல ஆர்வம் ஜாஸ்தி.எங்க காலேஜ் டீம்லயும் நான் இருக்கேன் " - வாசு.

அது ஆர்வம் இல்ல ஆர்வ கோளாறு அப்படின்னு மனசுல நெனச்க்கிட்டான் கோபி.ஆனாலும் வெளிய - "எனக்கும் ஆர்வம் ஜாஸ்தி .ஆனா என்ன பண்ண எங்க காலேஜ்ல புட்பால் கிரௌண்ட் இல்ல."

"சரி உங்களக்கு யார புடிக்கும் " - என்று வாசு ஆரம்பிக்க . புட்பால நம்ம அறிவு - குட் மார்னிங் மை நேம் இஸ் கோபி ரேஞ்சு தான் அதனால இதுல இருந்து எஸ்கேப் ஆகணும்னு பேச்சை மாத்தினான் கோபி ."மேட்ச் எதுல வருது.ஆரமிசிட போகுது.டிவி போடுங்க".

நல்ல வேலையாக மேட்ச் ஆரமிக்க நிம்மதி ஆனான் கோபி.


புட்பால் அதிகம் பார்க்காத மக்களுக்கு வரும் முதல் பெரும் சோதனை கோபிக்கும் வந்தது. வேற ஒன்னும் இல்ல எந்த டீம் இங்கிலாந்த்,எந்த டீம் பிரேசில் அப்படின்னு கண்டு புடிக்கறது தான்.

வாசு கிட்ட கேக்கறத விட முரளி கிட்ட கேட்டா சின்ன அவமானத்தோட போய்டும்னு அவன் கிட்ட போனான்.முரளி ஆர்வமா மேட்ச் பாத்துன்னு இருந்தான்.

"மச்சி - இங்கிலாந்த் டீம் டிரஸ் செம கன்றாவியா இருக்கில" - கோபி.

"ரெண்டுத்துல எதுடா இங்கிலாந்த்.நானும் ஆரமிச்சதுல இருந்து அததான் யோச்சிட்டு இருக்கேன் " - முரளி கவுன்ட்டர் குடுக்க கண்ணீர் வராத குறையாக அவன பார்த்தான் கோபி.அது சரி,நம்ம கூட சேருற கோஷ்டி நம்மள மாதிரி தானே இருக்கும்னு தெரிஞ்சது அவனுக்கு . "y blood same blood" கதை ஆனதால டீம் தெரியாம ரெண்டு பேரும் பாக்க ஆரமிச்சாங்க.

அப்பபோ வாசு ஆப் சைடு,பெனால்டி,கார்னர் கிக் அப்படின்னு சொல்ல இவுங்களும் ரியாக்டியன் குடுத்துட்டு இருந்தானுங்க.

" மச்சி விட்ரா.கோல் போட்டா கண்டுபுடிச்சிடலாம் " - முரளி.

இவுங்க நேரம் முதல் பாதி கோல் இல்லாமலே முடிஞ்சுது.

"ச்சே மேட்ச் ஒரே மொக்கையா போச்சி " - வாசு.மேட்ச் மட்டுமா .சரி அவமான பட்டாலும் பரவா இல்ல கேட்டுடலாம் அப்படின்னு ரெண்டு பேரும் கேட்டானுங்க.

"அட பாவிங்களா.அப்போவே கேட்டுருந்தா சொல்லிருப்பனே. வெள்ளை கலர் பிரேசில் மஞ்சள் கலர் இங்கிலாந்த்." - தெளிவாக வாசு சொல்லிட்டு இருக்கும் போதே முதல் கோல் அடிச்சானுங்க மஞ்சள் கலர் இங்கிலாந்த்.

இவுங்களே கோல் போட்ட மாதிரி கத்தி ஆர்பாட்டம் பண்ணிட்டு இருக்க ஸ்கோர் போர்டு பெருசா வந்தது (பிரேசில் 1 - இங்கிலாந்த் 0) அப்படின்னு.

முரளி ,கோபி ரெண்டு பேருக்கும் பல்பு எரிய - அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா - என்று வாசுவின் மொபைல் ரிங்டோன் அடிச்சது.

திங்கள், 15 நவம்பர், 2010

முதல் முதலாய்

பதிவு உலகில் எனது முதல் பதிவு. தமிழில் ஏதேனும் தவறு இருந்தால் மன்னித்தருள்க.

இந்த பதிவு தலைப்புக்கும் இங்க எழுத போறதுக்கும் என்ன சம்பந்தம் அப்படின்னு கேக்கற சில பேருக்கு நான் சொல்லற ஒரே விஷயம் - அஜித் நடித்த ஜி படத்தோட டைட்டில் மற்றும் கதைக்கு என்ன சம்பந்தமோ அதே தான் இங்கியும். இவன் தல படம் பத்தி தப்பா பேசறான் தளபதி ரசிகனா இருப்பான் போல அப்படின்னு அரசியல் பண்ணிடாதீங்க. ஏன்னா தல,தளபதி படங்கள் ரிலீஸ் ஆனா முதல் நாள் படம் பார்த்து மொக்க வாங்கன பல பேர்ல நானும் ஒருவன் .

சரி நா வந்த வேலைய ஆரமிக்கறேன்.

இனி வரும் சம்பவங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் யாவும் கற்பனையே அப்படின்னு மொத்தமா சொல்ல முடியாது. கொஞ்சம் கொஞ்சம் உண்மைகளும் உண்டு.

எல்லாருடைய வாழ்க்கையிலும் முதல்முதலாக இருக்கும் அனைத்துமே இனிமையான ஒன்னு.உதாரணமாக சூப்பர் ஸ்டார் படம் முதல் நாள் முதல் ஷோ, இந்த மாதிரி ஒரு பீலிங்க்ல தான் வீரபாகு இருந்தான்.


வீரபாகு - இப்படி சொன்னவுடனே கணபதி அயர் பேகரி,அவுங்க அக்கா சூப்பர் பிகுர் அப்படின்னு எல்லாம் நெனசீடாதீங்க. இவன் சேலம் பக்கத்தில் ஒரு கிராமத்தில் பிறந்தவன். அவன் இன்னைக்கி முதல் முதலாக தனது வாழ்வில் வரலாறு சிறப்பு மிக்க நிகழ்ச்சி ஒன்று நடக்க இருப்பதை எதிர் பார்த்து காத்து கொண்டு இருக்கிறான்.

இவன் இப்போது படித்து கொண்டு இருப்பது எட்டாம் வகுப்பு. அந்த விஷயம் நினைத்து ஏற்கனவே நேற்று இரவு முழுதும் தூங்க வில்லை. அவன் நண்பர்கள் எல்லாருக்குமே அது சாதாரண விஷயம். இவனுக்கு அப்படி இல்ல.

அவனின் நண்பன் சுருளி.



"எப்போடா நம்ம கெளம்ப போறோம் " - வீரபாகு மெதுவா ஆரம்பித்தான்.


"அட பாவி இப்போ மணி ஒன்பது தாண்டா ஆகுது . மதியமா எல்லாரயும் கூட்டிட்டு போவாங்க."


"எப்படி போக போறோம்"



"ஹ்ம்ம். பஸ்ல - தானா இருக்கும்"


ஒவ்வொரு மணி துளிகளும் அவனோட ஆர்வத்தை அதிக படுத்தி கொண்டே இருந்தது. சரியாக மணி ஒன்னு.அனைவரையும் பேருந்தில் அழைத்து செல்ல வகுப்பு ஆசிரியர் வந்தார். ஆர்வத்துடன் அனைவரும் கிளம்பினார்கள்.


சரியாக இருபது நிமிட பயணம். அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். வீரபாகு உடல் சிலிர்த்தது. அனைவரையும் உள்ளே அழைத்து சென்று இருக்கையில் அமர செய்தார் ஆசிரியர். தன் நண்பன் சுருளி அருகில் அமர்ந்தான் வீரபாகு.


"என்னடா எப்படி இருக்கு " - சுருளி கேட்டான்.


பதில் வரவில்லை. திரும்பி வீரபாகுவை பார்த்தான்.அவன் எழுந்து நின்று எதையோ தேடி கொண்டு இருந்தான்.சலிப்புடன் அமர்ந்த வீரபாகுவை பார்த்த சுருளி


" ஏண்டா என்ன ஆச்சி. என்ன அங்க தேடிட்டு இருக்க"


"இல்ல இவ்ளோ பெரிய எடத்துல ஒரு சின்ன டிவி வெச்சா எப்படி எல்லாராலையும் பாக்க முடியும் . அதான் வேற நல்ல எடம் இருக்கானு பாத்துட்டு இருந்தேன்."


விளக்குகள் அனைய.திரையரங்கில் டினோசார் போடும் சத்தம் ஆரம்பம் ஆகி கொண்டு இருந்து அந்த வெள்ளி திரையில்.